Type Here to Get Search Results !

கிறிஸ்தவர்களான நாம் எப்படி பேச வேண்டும்❓

[10/20, 8:48 AM] Isaac Samuel Pastor: ✝ *இன்றைய வேத தியானம் - 20/10/2016* ✝
கிறிஸ்தவர்களான 👉நாம் எப்படி பேச வேண்டும்❓ 

👉நாம் எப்படி எல்லாம் பேசக்கூடாது❓

👉மரணமும் ஜீவனும் எப்படி நமது நாவால் வரலாம்❓

👉நாம் எப்படி நமது வார்த்தைகளை மாற்றுவது❓

👉தவறாக  வார்த்தைகளை பேசியிருந்தால் அதை மாற்ற செய்ய வேண்டியது என்ன❓

*வேதத்தை தியானிப்போம்*


[10/20, 9:01 AM] Isaac Samuel Pastor: 21 மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள் 18 :21

[10/20, 9:03 AM] Manimozhi New Whatsapp: சங்கீதம் 1:1
[1]துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், *பரியாசக்காரர்* உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

[10/20, 9:09 AM] Christopher-jeevakumar Whatsapp: யாக்கோபு 3:  5 அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!
6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
13 உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
16 வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.
17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

[10/20, 9:10 AM] Isaac Samuel Pastor: 4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள். ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். எபேசியர் 5 :4

[10/20, 9:18 AM] Thomas Brother: பேசக்கூடாத பேச்சுகள்→
1) பெருமையான பேச்சு - யாக் 3:5
2) மேட்டிமையான பேச்சு - 1 சாமு 2:3
3) அகந்தையான பேச்சு- 1 சாமு 2:3
4) விம்பு வார்த்தைகள் - சங் 75:4
5) அதிகமான பேச்சு - மத் 5:37
6) கிழவிகள் பேச்சு - 1 தீமோ 4:7
7) விணான பேச்சு - மத் 12:36
8) கடுஞ் சொற்களை பேச கூடாது - நீதி 15:1
9) நம்மை புகழ்ந்து பேசக் கூடாது - நீதி 27:2
10) நாம் செய்த காரியங்களை புகழ்ந்து பேச கூடாது - நீதி 20:6
11) தீமையை பேச கூடாது - யோபு 27:3
12) துர் செய்தியை பேச கூடாது - எண்ணா 13:33
13) வம்பு வார்த்தைகள் - எபேசி 5:4
14) புத்தியினமான பேச்சு - எபேசி 5:4

15) பரியாசம் - எபேசி 5:4
16) சபித்தல் - யாக் 3:10
17) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகள் - நீதி 12:18
18) இறுமாப்பான வார்த்தை - யுதா:16
19) கோள் சொல்லுதல் - லேவி 19:16
20) புறங்கூறுதல் - சங் 15:3
21) பிரயோஜனமில்லாத வார்த்தைகள் - யோபு 15:3
22) தர்க்கத்தை உண்டு பண்ணும் பேச்சு - யோபு 15:3
23) ஒய்வு நாளில் சொந்த பேச்சு - ஏசா 58:13
24) கபடான பேச்சு- சங் 120:2,3
25) கடினமான பேச்சு - சங் 94:4
26) கசப்பான வார்த்தை - சங் 64:4
27) தகாத காரியங்களை - 1 தீமோ 5:13
28) மற்றவர்களை குற்றவாளியாக திர்த்தல் - ரோ 2:1
29) இச்சையான வார்த்தை - 1 தெச 2:5
30) பதற்றமுள்ள வார்த்தைகளை - நீதி 29:20
31) தந்திரமான வார்த்தை - 2 பேது 2:3
32) விரோதமான பேச்சு- 3 யோ :10
33) மாயையை (உலகம், இல்லாமல் போகும் பொருள்) அதிகம் பேச கூடாது - சங் 144:8
34) ஆகாத சம்பாஷணைகள் - 1 கொரி 15:33
35) பொய் - சங் 63:11
36) கசப்பான வார்த்தை - சங் 54:4

[10/20, 9:18 AM] Thomas Brother: நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும் →
1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் - பிரச 5:2
2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 4:4
3) நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
4) மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
5) ஜிவ  வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ஜிவனை (உயிரை) கொடுக்கும் வார்த்தை) - நீதி  10:11
6) இன்பமான வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு இன்பத்தை தரக்கூடிய வார்த்தைகளை) - ஆதி 49:21
7) கிருபை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - கொ 4:6
8) உப்பால் சாரம் ஏறிய வார்த்தைகளை பேச வேண்டும் - கொ 4:6
9) அறிவுள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:2
10) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
11) மற்றவர்கள் துக்கத்தை மாற்றும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5
12) மற்றவர்களை திடப்படுத்துகிற (தைரியப்படுத்துகிற)  வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5
14) ஞானத்தை பேச வேண்டும் - நீதி 10:31
14) நற்செய்தியை பேச வேண்டும் - நீதி 15:30
15) செம்மையான வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 6:25
16) நியாய பிரமாணத்தை (வேத வசனத்தை) பேச வேண்டும் - யோசுவா 1:8
17) தேவனுக்கு பிரியமானதை பேச வேண்டும் - சங் 19:14
18) நலமானதை பேச வேண்டும் - மத் 12:34
19) ஆரோக்கியமான வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:14
20) உத்தம காரியங்களை பேச வேண்டும் - நீதி 8:6
21) உண்மை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - மத் 5:37
22) நன்மையே பேச வேண்டும் - ஆதி 31:24
23) மெதுவான பதில் - நீதி 15:1
24) இனி வரும் உலகத்தை (புதிய வானம், பூமி) பேச வேண்டும் - எபி 2:5
[10/20, 9:20 AM] Thomas Brother: யாருக்கு விரோதமாக பேச கூடாது →
1) ஊழியக்கரானுக்கு விரோதமாக - எண்ணா 12:8
2) நீதிமானுக்கு விரோதமாக - சங் 31:18
3) ஒருவருக்கொருவர் விரோதமாக - யாக் 4:11
4) சகோதரனுக்கு விரோதமாக - சங் 50:20
5) தேவனுக்கு விரோதமாக - அப் 6:11
6) வேத பிரமாணத்திற்கு விரோதமாக - அப்போ 6:13

[10/20, 9:21 AM] Thomas Brother: தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள் =
1) ஆகாத சம்பாஷணைகள் = நல்லொழுக்கத்தை கெடுக்கும் - 1 கொரி 15-33
2) சொற்களின் மிகுதியால் = பாவம் - நீதி 10-19
3) கடுஞ்  சொற்கள் = கோபத்தை உண்டாக்கும் - நீதி  15-1
4) வாயின் வார்த்தை = மற்றவர்களை நொறுக்கும் - யோபு 19-2
5) வாயில் இருந்து புறப்படுவது = மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) - மத் 15-11
6) பெருமை பேசும் நாவை = கர்த்தர்  அறுத்து போடுவார் - சங் 12-3
7) பொய் பேசும் வாய் = அடைக்கபடும் - சங்  63-11
8) நாவு = முழு சரிரத்தையும் கறைபடுத்தும் - யாக் 3-6
9) வாயினால் பாவம் செய்தால் = கைகளின் கிரியை அழிக்கபடும் - பிரச 5-6
10) உதடுகளை விரிவாக திறந்தால் = கலக்கம் அடைவோம் - நீதி  13-3
11) உதடுகளின் பேச்சு = வறுமையை தரும் - நீதி 14-23
12) இனிய நாவு = எலும்பை நொறுக்கும் - நீதி 25-5
13) நாவின் மாறுபாடு = ஆவியை நொறுக்கும் - நீதி 15-4
14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு = நீயாத்திர்பபு உண்டு - மத் 12-30
15) வீண் பேச்சு = அவபக்தியை உண்டாக்கும் - 2 தீமோ 2-16
16) வீண் பேச்சு பேசினால் = கர்த்தரை விட்டு விலகி போவோம் - 1 தீமோ 1-6
17) நமது வார்த்தையில் = கர்த்தரை வருத்த படுத்த கூடாது - மல்கியா 2-17
18) வாயின் வார்த்தை = மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் - பிரச 5-6
19) மற்றவர்களை தீர்க்கிற படியே = நீங்களும் தீர்க்க படுவிர்கள் - மத் 7-2
20) மூடரின் வாய் = அடிகளை வரவழைக்கும் - நீதி 18-6
21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = நீயாத்திர்பபு  உண்டு - யாக் 5-9
22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் = பேசுகிறவனின் பிள்ளைகள்  கண்கள் பூத்து போகும் - யோபு 17-5
23) பொய் பேசுகிறவனை = கர்த்தர் அழிப்பார் - சங் 5-6
24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = அழிவோம் - கலா 5-15
25) நாவை அடக்காதவன் தேவ பக்தி = வீண் - யாக் 1-26
தேவ ஜனமே உனது வாய் எப்படிபட்ட காரியங்களை  பேசுகிறது.
என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19 :14

[10/20, 9:51 AM] Thomas Brother: "தேவாங்கு போல இருக்கும் நீ என்னை காதலிப்பதாக எப்படி சொல்வாய் என என்னை கடுமையாக திட்டினாள். அவளின் பேச்சு எனக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. அவளின் நாக்கை அறுக்க வேண்டும், வாயில் வெட்ட வேண்டும் என்று நினைத்தேன். வெட்டு கழுத்தில் விழுந்ததால் இறந்து விட்டாள் "
மேற்கண்ட வார்த்தை
சுவாதியை கொன்ற ராம்குமார் போலிஸில் கூறியது
இதை படித்த போது எனக்கு கீழ்கண்ட வசனம் ஞாபகத்துக்கு வந்தது
கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். நீதி் 15 :1
ராம்குமார் செய்தது சரி என்று நான் கூறவில்லை.
இன்றைக்கு  குடும்பத்தில், வேலை பார்க்கும் இடத்தில் சண்டை வருகிறது, காரணம் என்னவென்று பார்த்தால் தேவையற்ற பேச்சினால்தான்.
ஆகையால் நாம் பேசும் வார்த்தைகளை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். நீதி் 25 :15
பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு - நீதி் 12 :18
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! யாக் 3 :6
தேவ பிள்ளைகள் பேசும் பேச்சு மற்றவர்கள் மனதை புண்படுத்தும் விதமாக, கோபபடுத்தும் விதமாக, ஆத்திரபடுத்தும் விதமாக இருக்க கூடாது
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன் - சங்கீதம் 39:1

[10/20, 9:53 AM] Jeyanti Pastor: நீதிமொழிகள் 21:23  தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
லூக்கா 21:19  உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
ஆத்துமா ௧ா௧்௧ப்பட வேண்டியது மு௧்௧ியம்.  இதற்கு நாவட௧்௧ம் மி௧வும் உதவும்.

[10/20, 9:53 AM] Jeyanti Pastor: நீதிமொழிகள் 21:23  தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
லூக்கா 21:19  உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
ஆத்துமா ௧ா௧்௧ப்பட வேண்டியது மு௧்௧ியம்.  இதற்கு நாவட௧்௧ம் மி௧வும் உதவும்.

[10/20, 9:59 AM] Jeyaseelan Whatsapp: *மல்கியா 3:16*
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
கர்த்தர் கவனித்துக் கேட்பார்'  என்று வேதம் சொல்கிறது. நாம் பேசுவதை கர்த்தர் கேட்கிறார் என்ற உணர்வு இருந்தால் நாம் பிரயோஜனமான வார்த்தைகளை தவிர வேறு வார்த்தைகளை பேச மாட்டோம்.
 பக்திவிருத்திக்கேதுவான வார்த்தைகளையே பேச நம் ஒவ்வொருவருக்கும் தேவன் தாமே கிருபை செய்வாராக!

[10/20, 10:04 AM] Darvin-ebin Whatsapp: ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத வாக்குவாதம் செய்யக்கூடாது இதை கேட்கிறவர்களையும் இது கவிழ்த்துப்போடும். இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரித்து புத்திசொல்லவேண்டும். வெட்கபடாதவர்களாய் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிகவேண்டும். (2தீமோத்தேயு2:14,15)

[10/20, 10:06 AM] Darvin-ebin Whatsapp: எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி யும், பிசாசானவனின் இச்சையின்படி மயங்கி திரிகிறவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிய அவர்களுக்கு சாந்தமாய் உபதேசித்து பேசவேண்டும். ( 2தீமோத்தேயு 2:25,26)
[10/20, 10:08 AM] Thomas Brother: வேதத்தில் →
1) வாயின் வார்த்தைகளால் பாவம் செய்தவர்கள் யார் யார்?
2) பக்தி விருத்தி உண்டாகும் உண்டாக்கும் வார்த்தைகள் பேசியவர்கள் யார் யார் ?
3) வாயின் வார்த்தைகளால் நஷ்டம் அடைந்தவர்கள் யார் யார்?

[10/20, 10:08 AM] Jeyanti Pastor: உன்னதப்பாட்டு 4:11  என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
ரோமர் 3:13  அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்.  அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறதுÉ
14  அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது.
இந்த வசனங்௧ளில் துன்மார்க்கருடைய  நாவுப்பற்றி பார்௧்௧ிறோம்.  ௮து ௮த்தனை ஆசீர்வாதமானதா௧ இல்லை. 
ஆனால் நம்முடைய உதடு௧ளின்கீழ் தேனும் பாலுமா௧ிய தேவ வசனம் இரு௧்௧ வேண்டும். 
மல்கியா 2:7  ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும் வேதத்தை அவன் வாயிலே தேடுவார்கள் அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

நீதிமொழிகள் 10:20  நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

[10/20, 10:21 AM] Jeyaseelan Whatsapp: *எபேசியர் 4 :29*
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம். பக்திவிருத்திக்குஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
கிறிஸ்துவை ஏற்று கெண்ட நாம் யாரும் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை. ஆனால் பிறரை குறித்து புறங்கூறுதலும் பாவமே. இதனால் அவரை பற்றி அந்த நபர் கொண்டிருந்த நல்லெணணம் அழிந்து விடுகிறது. பகைமையை  வளர்க்கிறது. அது போல குறை கூறுதலும் அநேகருடைய மனதை புண்படுத்தி விடுகிறது. கோபமான வார்த்தைகள் காட்டு தீக்கு சமானம். முழு உறவினர்களின் உறவையும் அழித்து விடும் சக்தி கொண்டது. மாறாக பிறரை கர்த்தருக்குள்  வளர செய்யும் பக்தி விருத்தியடைய செய்யும் வார்த்தைகள் உண்டு. பிறரது காயங்களை ஆற்றும் ஆறுதலான வார்த்தைகள் உண்டு. இத்தனை நல்ல பேச்சுகள்  இருக்க நாம் இன்னும் கெட்டவைகளையே பேசி கொண்டிருப்போமானால், இனிய பழத்தை வேண்டாமென்று ஒதுக்கி, காயை சாப்பிட்டதற்கு சமமாகும்.
*நமது வார்த்தைகள் உறவுகளை இணைத்துள்ளதா? அல்லது உடைத்துள்ளதா?*
 *நமது  வார்த்தைகள் ஒருவரை நீதிக்குட்படுத்தியுள்ளதா? அல்லது பின்மாற்றம் அடைய செய்துள்ளதா?*
 *நமது வார்த்தைகள், பிறருக்கு பிரயோஜனமாயிருந்ததா, அல்லது அவர்களது நேரத்தை வீணடித்ததா?*
என்று யோசித்து பார்ப்போமா..

[10/20, 10:23 AM] Darvin-ebin Whatsapp: மற்றவர்களுக்கு பயம் உண்டாகும்படி எல்லாருக்கும் முன்பாகவும் (அதாவது விசுவாசிகழுக்கு முன்) பவம் செய்தவர்களை கடிந்து பேசவேண்டும். நன்கு விசாரிக்கும் முன்பு யாரையும் குறித்து குற்றப்படுத்தி பேசக்கூடாது. (1தீமேத்தேயு 5:20,21)

[10/20, 10:29 AM] Darvin-ebin Whatsapp: நம்மிடம் இல்லாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுருத்தி பேசகூடாது நம்மை குறித்தும் நாம் பேசுகிற வார்த்தையைகுறித்தும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். (1தீமேத்தேயு 4:16)

[10/20, 10:54 AM] Thomas Brother: ஏவாள் சர்ப்பத்திடம் கனியை புசிக்கவும், தொடவும் வேண்டாம் என்று கர்த்தர் கூறியதாக கூறினாள் (ஆதி 3-3)
கர்த்தர் கூறியது புசிக்க வேண்டாம் (ஆதி 2-7)
ஏவாள் "தொடவும் வேண்டாம்" என்று சொன்ன வார்த்தை extra வார்த்தை.
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது நீதி் 10 :19
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். மத்தேயு 5 :37
அதுமட்டுமல்ல ஏவாள் சா்ப்பத்திடம் பேசி இருக்க கூடாது. எனது புருஷன் வருவான். அவனிடம் பேசி கொள் என்று ஒதுங்கி இருக்க வேண்டும். சர்ப்பத்திடம் பேச்சு கொடுத்தது இவள் தவறு
துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். சங்கீதம் 39 :1
உலக மக்கள், துன்மார்க்கர் இடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

[10/20, 11:06 AM] Tamilmani Brother: *சாப்டீங்களா........*
 *எல்லா பாலியல் தவறுகளுக்கும் அடிப்படை தேவையற்ற பேச்சு. எதிர்பாலினர் எந்த வயதை உடையவராயிருந்தாலும் சரி, வீண் பேச்சை தவிர்த்தாலே பல தவறான தொடர்புகள் குறையும்.*
_தவறான தொடர்புகள் அனைத்தும் அனைத்தும் ஒரே நாளில் ஏற்படுவதில்லை. அடிக்கடி பார்த்து, பேசி, முதலில் பொதுவான காரியங்கள் பற்றி பேசி, பின்பு குடும்ப பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டு, பின்பு ஆறுதல் சொல்கிறேன் உதவி செய்கிறேன் என்று தவறான தொடர்பில் முடிவடைகிறது._
_இதன் ஆரம்பம் எங்கே என்று பார்த்தால், சாப்டிங்களா என்று அக்கறையுடன் கேட்கும் கேள்வியில் ஆரம்பம்...._
_சாப்டிங்களா என்று கேட்பது ஒரு தவறா? இத கூடவா கேட்பது தவறு? என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ஆனால் நீங்கள் யோசித்து பாருங்க உங்கள் ஆண் நண்பனிடமும் இப்படி அக்கரை காட்டடுவீங்களா??_
*நம்மை நேசிப்பது போல பிறனை நேசிப்பதுதான் கிறிஸ்தவம். ஆனால் அந்த அன்பு உங்கள் குடும்பத்துக்கோ, மற்றவர் குடும்பத்துக்கோ இடறலாய் இருக்க கூடாது.*
*சரி விசயத்துக்கு வருவோம்..*
*சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான் என்று வேதம் மிக தெளிவாக சொல்கின்றது.*
_பேசுவது தவறல்ல, தேவையானதை மாத்திரம் பேசுதல் தவறல்ல. தேவையற்றதையும், பிரச்சனை உண்டாக்குவதையும், பிரிவினையுண்டாக்கும் தேவையற்ற பேச்சுக்களையும் பேசாமல் தன் உதடுகளை அடக்குகிறவனே புத்திமான்._
_மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்._
1 கொரி 15:33.
_உங்கள் கஷ்டங்களையும் பாரங்களையும் தேவனிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தாரோடு பகிருங்கள்.. மிகவும் தேவைப்பட்டால் உங்கள் சபையில் உள்ள உங்கள் பாலினத்தை சேர்ந்த ஒரு மூப்பரோடு பகிருங்கள்._
_உங்கள் எதிர்பாலினரிடம் பகிர்ந்து ஆறுதல் தேடுவது மிக தவறு._
_உலக சிநேகம் தேவனுக்கு பகையல்லவா....யாக்கோபு 4:4-ல் வேதம் நம்மை எச்சரிக்கிறது._
_எளிதில் விழுந்து விடுவது மனித இயல்பு. எளிதில் விழ வைப்பது சாத்தானின் இயல்பு._
_“தேவனுடைய சாயலை இழந்துவிடும்படி நாவை உபயோகிக்காமல், அதற்கு எல்லையைக் வைத்துக்கொண்டு பேசுங்கள்._
 _இல்லையேல் தேவனுக்கு மிக அருவருப்பான தேவனால் மிக வெறுக்கப்படும் விபச்சாரத்துக்குள் வீழ்வோம்._
~ பகிர்வு

[10/20, 11:17 AM] Tamilmani Brother: நம்முடைய
இருதயத்தில்
தாழ்மை
மிக மிக
முக்கியம்.
நம் பேச்சு
மற்றவர்கள்
மனதில் நிற்கும்.
கிறிஸ்துவுக்குள் தீர்க்கமாக இருக்க வேண்டும்.
பரிசுத்த பேச்சு
பலரை மாற்றும். இவைகளுக்கு எதிரான எந்த பேச்சும் வீண்.
வசனப்பேச்சு
வாழ்வையே மாற்றும்.

[10/20, 11:19 AM] Darvin-ebin Whatsapp: சரியாக சொன்னீர் தாமஸ் ஐயா சொர்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது அதுவும் பரியாசவார்த்தை இது கர்த்தரால் அருவருக்ககூடிய ஒன்று இதையே மதிப்புக்குரிய போதகர்கள், ஊழியர்கள் பேசினால் எத்தனை அருவருப்பானது ஆகையால் பரியாச வார்த்தைகளை பேசுவதை தவிர்க்கவேண்டும். (சங்கீதம் 2:1)

[10/20, 11:19 AM] Tamilmani Brother: சண்டை வீண் வாதங்கள்
 சண்டையின் ஆரம்பம் மதகைத்திறந்துவிடுகிறது போலிருக்கும்: ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
 நீதிமொழிகள் 17 :14
 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்:  சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்..
 நீதிமொழிகள் 15 :18
 மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்: கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதத்தையும் பிரித்துவிடுகிறான்.
- நீதிமொழிகள் 16 :28
விறகில்லாமல் நெருப்பு அவியும், கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும்.
-  நீதிமொழிகள் 26 :20

[10/20, 11:25 AM] Darvin-ebin Whatsapp: ✝ *இன்றைய வேத தியானம் - 20/10/2016* ✝
👉நாம் எப்படி பேச வேண்டும்❓
👉நாம் எப்படி எல்லாம் பேசக்கூடாது❓
👉மரணமும் ஜீவனும் எப்படி நமது நாவால் வரலாம்❓
👉நாம் எப்படி நமது வார்த்தைகளை மாற்றுவது❓
👉தவறாக  வார்த்தைகளை பேசியிருந்தால் அதை மாற்ற செய்ய வேண்டியது என்ன❓
*வேதத்தை தியானிப்போம்*
           ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத வாக்குவாதம் செய்யக்கூடாது இதை கேட்கிறவர்களையும் இது கவிழ்த்துப்போடும். இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரித்து புத்திசொல்லவேண்டும். வெட்கபடாதவர்களாய் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிகவேண்டும். (2தீமோத்தேயு2:14,15)
                                        எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படிர யும், பிசாசானவனின் இச்சையின்படி மயங்கி திரிகிறவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிய அவர்களுக்கு சாந்தமாய் உபதேசித்து பேசவேண்டும். ( 2தீமோத்தேயு 2:25,26)
          மற்றவர்களுக்கு பயம் உண்டாகும்படி எல்லாருக்கும் முன்பாகவும் (அதாவது விசுவாசிகழுக்கு முன்) பவம் செய்தவர்களை கடிந்து பேசவேண்டும். நன்கு விசாரிக்கும் முன்பு யாரையும் குறித்து குற்றப்படுத்தி பேசக்கூடாது. (1தீமேத்தேயு 5:20,21)
          நம்மிடம் இல்லாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுருத்தி பேசகூடாது நம்மை குறித்தும் நாம் பேசுகிற வார்த்தையைகுறித்தும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். (1தீமேத்தேயு 4:16)
               சரியாக சொன்னீர் தாமஸ் ஐயா சொர்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது அதுவும் பரியாசவார்த்தை இது கர்த்தரால் அருவருக்ககூடிய ஒன்று இதையே மதிப்புக்குரிய போதகர்கள், ஊழியர்கள் பேசினால் எத்தனை அருவருப்பானது ஆகையால் பரியாச வார்த்தைகளை பேசுவதை தவிர்க்கவேண்டும். (சங்கீதம் 2:1)
[10/20, 11:43 AM] Thomas Brother: பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்: தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். நீதிமொழிகள் 17 :28

[10/20, 11:45 AM] Tamilmani Brother: _நாம் எப்படி பேச வேண்டும்?_
*இயேசுவைப்போல் பேச வேண்டும்.*
(Practical a முடியாது சகோ ன்னு சொல்லுவாங்க, சும்மா பேசிப்பாரு வசன வசனமா வரும். உரத்த குரலும் வரும்.)
நாம் எப்படி எல்லாம் பேசக்கூடாது?
*கோபப்பட்டு ஆவேசமாக பேசக்கூடாது.*
பேச்சில் சுயம் இருக்கக்கூடாது.
*தீர்மானமான முடிவெடுத்திட்டப்பிறகு திடமாக பேசனும்.*
சிலரோடு என்ன பேசறதுன்னு தெரியாதபோது ஆவியானவர் துணையை நாடனும்.
*சகோதர சகோதரிகளோடு வீணான பேச்சு, Time passing பேச்சு, சும்மா பேச்சு, வம்புபப்பேச்சு, தரமில்லாத மொழிப்பேச்சு, சினிமா பாட்டு, சினிமா கதைப்பேச்சு ஆகாது! ஆகாது! ஆகாது!*
*ஜீவனுள்ள பேச்சு பேசனும்னா வசனப்பேச்சுதா பேசனும். வசன கதை, வசன பாட்டு, வசன நகைச்சுவை பேசினா ஜீவன் வரும். தேவ மனிதன் சாட்சி- தேவ ஊழியர் சாட்சி ஜீவனைத்தரும்.*
நாம் பேசும் வார்த்தைகள் தப்புன்னு உணர ஆவிக்குரிய சகோதரர்கள் மூலம் ஆவியானவர் உணர்த்துவார்.
நாம மாறிடனும்.
*தவறான வார்த்தை பேசியிருந்தால் கர்த்தரிடம் வேண்டிக்கொள்ளுதல் - மன்னிப்பு பெற்றுக்கொள்ளுதல்.*

[10/20, 11:49 AM] Thomas Brother: 10 யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள். உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம். ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். யோசுவா 6 :10
உங்கள் வாயில் இருந்து ஒரு பேச்சும் புறப்பட வேண்டாம் என்று சொல்ல காரணம் = அவர்கள் அவிசுவாச வார்த்தைகளை பேசி இருப்பார்கள்

[10/20, 11:54 AM] Tamilmani Brother: கிறிஸ்தவன் போல் நீங்கள் சிந்திக்கவும், பேசவும், நடந்துகொள்ளவும் வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
கிறிஸ்தவன்போல், பேசுகிறீர்களா, சிந்திக்கிறீர்களா? வாலிபர்கள் என்றாலே எல்லோருக்கும் விளையாட்டுப் பசங்க என்ற எண்ணம் இருப்பதற்குக் காரணம் என்ன? உங்களுடைய பேச்சும் நடத்தையும்தான் அதற்குக் காரணம். கேளிப்பேச்சு கிறிஸ்தவனுக்கு இருக்கலாமா? வாலிபர்களாக இருப்பதற்காக உலகத்து வாலிபனைப்போல கிறிஸ்தவ வாலிபன் பேசலாமா, நடந்துகொள்ளலாமா? பேச்சு மொழி, பேச்சு முறை, வயது கூடியவர்கள் இருக்குமிடத்தில் பேசும் முறை, வாலிபப் பெண்கள் இருக்கும் இடத்தில் பேசும்முறை என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் கல்லூரி பையன்களோடு பேசும் பேச்சைத் தொடர்கின்ற கிறிஸ்தவ வாலிபன் சபையில் பெரியவர்களிடமும், பெற்றோர்களிடமும் நம் சமுதாயத்தில் மதிப்பைப் பெற முடியுமா? உங்கள் பேச்சு எப்படி இருக்கிறது என்பதை முதலில் நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து பார்த்து கிறிஸ்துவுக்கு ஏற்றமுறையில் மாற்றிக்கொள்வதற்கு பெயர்தான் ரோமர் 8ல் பவுல் விளக்கும் ‘மாம்சத்தை அழிப்பது’ என்பதற்கு அர்த்தம்.
வேதத்தை அன்றாடம் தவறாமல் வாசித்து, ஜெபித்து, சபை வாழ்க்கைக்கு இடம் கொடுத்து வைராக்கியத்தோடு கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும்.

[10/20, 11:55 AM] Elango: 6 *அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.*
கொலோசெயர் 4
Shared from Tamil Bible

[10/20, 11:57 AM] Elango: 21 அதற்கு இயேசு: *ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு,* நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
யோவான் 4
Shared from Tamil Bible
*வனாதி வானங்களை உண்டாக்கியவர் தாழ்மை கோலத்தில் தாழ்மையாக உறுதியாக பேசுகிறார்*

[10/20, 12:12 PM] Tamilmani Brother: *பிரசங்கப்பேச்சு - நடை - மொழி - தொணி - பாவனை*
_~ போதகர். பாலா - நியூசிலாந்து
 Biblelamp.me
பிரசங்கங்களை நாம் வேத அடிப்படையில் கஷ்டப்பட்டு ஆராய்ந்து தயாரித்து விடுவதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை. கடினமாக உழைத்து ஞானத்தோடு பிரசங்கங்களைத் தயாரிப்பது இன்றியமையாதது. அப்படித் தயாரித்த பிரசங்கத்தை ஆத்துமாக்களுக்கு முன் பிரசங்கிப்பது அதன் அடுத்த பகுதியாகும். பிரசங்கத்தை பிரசங்கித்து முடியும்வரை அந்தப் பணி நிறைவேறிவிட்டதாக நாம் கருத முடியாது. எத்தனைக் கருத்தோடு பிரசங்கத்தை உழைத்துத் தயாரித்தாலும் அதை ஆத்துமாக் களுக்கு முன் படைக்காதவரை அதனால் பிரயோஜனம் இருக்காது.
பிரசங்கப் பேச்சுநடை
பிரசங்கிகள் பிரசங்கிக்கும்போது கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களை இனி ஆராய்வோம். அதில் பிரசங்கத்தைப் பிரசங்கிக்கப் பயன்படுத்தும் பேச்சுநடை பற்றி முதலில் பார்ப்பது அவசியம். தமிழில் பிரசங்கிக்கும் பிரசங்கிகள் அந்த மொழியில் வளமாகப் பேசத் தெரிந் திருப்பது அவசியம். பிறந்தது முதல் பேசிக்கொண்டிருக்கிற மொழியில் யாருக்காவது வளமாகப் பேசத் தெரியாமல் இருக்குமா? என்று நீங்கள் கேட்கலாம். பிறந்தது முதல் நாம் தாய் மொழியில் பேசினாலும் பிரசங்கம் செய்கிறபோது அது சுலபமாக நல்ல முறையில் அமைந்துவிடும் என்று நினைப்பது தவறு. இன்றைய நடைமுறைப் பேச்சுத் தமிழ் கொச்சையாக இருப்பது நமக்குத் தெரியும். அதில் இலக்கண சுத்தத்திற்கோ, அழகுணர்ச்சி நயங்களுக்கோ இடமில்லை. நாம் பேசுகின்ற மொழி பிரசங்கம் செய்வதற்கு ஏற்றவிதத்தில் அமைந்திருக்க வேண்டும். இதற்கு மொழிப்பயிற்சி அவசியம்.
மொழியில் பயிற்சி இல்லாமல் பிரசங்கத்தை அளிக்க முடியாது. இதற்காக நாம் பண்டிதர்களாகிவிட வேண்டிய அவசியமில்லை. இலக்கணம் முதல் மொழி பற்றிய அனைத்திலும் நல்ல பயிற்சி இருக்க வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். வளமாகப் பேசத் தெரியாத காரணத்தால் பிரசங்கி ஒரு நல்ல பிரசங்கத்தைப் பயனற்றதாக்கி விடலாம். அதைவிடக் கொடுமை இருக்க முடியாது. மொழி அறிவும், மொழி வளமும் இல்லாமல் பிரசங்கம் கேட்பவர்களை சோர்வடையச் செய்கிறவர்கள் இன்று அதிகம். ஒரு சிலருடைய குரலைக் கேட்டாலே நமக்கு ஓடிவிடத் தோன்றும். அப்படியிருக்கும்போது அவர்களுடைய பிரசங்கங்களை இருந்து கேட்பதெப்படி? இன்று பிரசங்க ஊழியத்தின் இந்த விஷயத்தில் இறை யியல் கல்லூரிகளோ, சபைகளோ அக்கறை காட்டுவதில்லை. டெலிவிஷனில் செய்தி வாசிப்பவர்களையும், பேசுகிறவர்களையும் அவர்களுடைய பேச்சுநடை, மொழிவளம் ஆகியவற்றைப் பார்த்தே இந்த உலகத்தார் தெரிவு செய்கிறார்கள். பேசுவதற்கு அவர்கள் நல்ல பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. பிரசங்க ஊழியத்தில் இன்றைக்கு தட்டித்தடுமாறி, திக்கித் திணறி, வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாதவர்கள் பெருகிக் கிடப்பது நம்மினத்தைப் பிடித்துள்ள வியாதியே.
தமிழகத்துப் பிரசங்கிகளில் பலர் பிரசங்கத்துக்கென்று தனியாக ஒரு மொழிநடையைத் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பிரசங்கம் கேட்கிறவர்கள் பேசுகிறது நம் போதகர்தானா? என்று தலையை உயர்த்திப் பார்க்கும் விதத்தில் அவர்களுடைய மொழி நடை அமைந்திருக்கும். பிரசங்க மேடைக்கு வெளியில் அவர்களுடைய பேச்சு வித்தியாசமானதாக இருக்கும். ‘பிரியமானவர்களே’, ‘அன்பானவர்களே’ என்று ஆத்துமாக்களை பார்த்துப் பேசாத தமிழகத்துப் பிரசங்கிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மிகவும் பழமையானது. இன்று அந்த மொழி நடையில் எழுதுகிறவர்களையும் பேசுகிறவர்களையும் நம்மினத்தில் பார்க்க முடியாது. பிரசங்கிகளில் பலர் இன்று அந்த மொழி நடையை பிரசங்கிக்கும்போது பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் அது கர்த்தரின் பாஷையாம்! புறஜாதி மனிதன் சபைக்கு வந்தால் இந்த மொழிநடையைக் கேட்டே ஓடிவிடுவான் என்பது அநேகருக்குப் புரிவதில்லை. வழக்கமாக நாம் பேசும்போது பயன்படுத்தும் மொழி நடையை பிரசங்கிக்கும்போதும், பிரசங்க மேடையில் நிற்கும்போதும் பயன்படுத்துவது தகாது என்ற தவறான எண்ணம் எல்லாப் போதகர்களுடைய இரத்தத்திலும் ஊறிப்போயிருக்கிறது.
பிரசங்கிக்கும்போது நாம் வழக்கத்துக்கு மாறான மொழிநடையைப் பயன்படுத்தினால் ஆத்துமாக்களுக்கும் நமக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடும். பிரசங்கமும் கேட்பதற்கு செயற்கையானதாக இருக்கும். அதில் உயிரோ, உணர்ச்சியோ இருக்காது. அருமையான பிரசங் கத்தைக் கூட, மொழிநடை செயற்கையானதாக இருப்பதால் நாம் கெடுத்துவிடலாம். இதற்காக நாம் வழக்கில் இருக்கும் கொச்சைத் தமிழில் பேச வேண்டுமென்று சொல்லவில்லை. பண்டிதத் தமிழ் வாடையோ அல்லது நாம் யார் என்பதை அடையாளம் காட்ட முடியாத மொழி நடையோ இருந்துவிடக்கூடாது என்றுதான் சொல்லுகிறேன். பிரசங்க மொழி நடை மக்களுடைய பாஷையில் இருக்கவேண்டுமென்பதில் ஸ்பர்ஜன் உறுதியாக இருந்தார். சீர்திருத்தவாதிகளான மார்டின் லூதரும், கல்வினும், நொக்ஸும் அதற்குப் பின்வந்த ஜோர்ஜ் விட்பீல்ட் போன்றோரும் மக்களுடைய பாஷையிலேயே பேசினார்கள்.
பிரசங்கிகளுடைய பேச்சு வெளிப்படையாக இருக்க வேண்டும். ஜோடனைகள் உள்ளதாக செயற்கையாக இருக்கக்கூடாது. இதைக் குறிக்க வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தை Parresia (அப்போஸ். 4:13). இதற்கு வெளிப்படையான, ஒளிவு மறைவில்லாமல், நேரடியான ஆகிய அர்த்தங்கள் உண்டு. கர்த்தர் செயற்கையான பாஷையில் நம்மோடு பேசவில்லை. மனிதர்களுக்குப் புரிகிற பொதுவான மானிட மொழியில்தான் (Common or Vulgar language) பேசினார். இயேசு கிறிஸ்துவும் மனிதர்களுடைய அன்றாட பாஷையில் அவர்களுக்கு தெளிவாகப் புரிகிற மொழியில் பேசினார். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும் இவ்விதமாகவே பேசியிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுடைய பேச்சில் கடுமையான வார்த்தைகளும், முகம் சுழிக்கக்கூடிய வார்த்தைகளும் இருந்திருக்கின்றன. தேவைப்பட்ட இடங்களில் அப்படிப் பேசுவதை அவர்கள் தவிர்க்க வில்லை. இதற்காக கீழ்த்தரமான பாஷையில் நாம் பேச வேண்டும் என்பதல்ல. தீர்க்கதரிசிகளும், இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் ஜோடனைகள் எதுவுமின்றி, தெளிவான மொழியில் குழப்பங்கள் இல்லாமல் கிராமத்தானுக்கும் புரிகிற பாஷையில் பேசினார்கள். பிரசங்கம் ஆத்துமாக்களுடைய இதயத்தில் பதிய வேண்டுமானால் நாம் பேசுகிற மொழி அவர்களுக்கு புரியக்கூடியதாக, அவர்களுடைய நெஞ்சில் பதியக்கூடியதாக இருக்க வேண்டும்.
சார்ள்ஸ் பிரிட்ஜஸ் (Charles Bridges) சொல்லுகிறார், “ஒரு மனிதனை மிகவும் படித்தவனைப்போலக் காட்டக்கூடிய மொழியில் எழுதவும், பேசவும் வைப்பது அவனுடைய மாயையே. ஆனால், பக்திவிருத்தி ஒரு அறிஞனை ஜோடனைகளில்லாத மொழியில் பொதுமக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் பேசவைக்கும்.” ஜோடனைகளில்லாமல், படிப்பறிவில்லாதவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேசுவது இலகுவான காரியமல்ல என்கிறார் பிசப் ஜே. சி. ரைல். “கஷ்டப்படாமல் இதை நாம் அடைய முடியாது. மீண்டும் சொல்லுகிறேன், வலியும், கஷ்டமும் இல்லாமல் இது வராது” என்கிறார் ரைல். இதுபற்றி ஸ்பர்ஜன் பின்வருமாறு சொன்னார், “ஆத்துமாக்களில் நமக்கிருக்கும் அன்பு நம்மைப் பலவிதங்களில் உழைக்க வைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த அன்பினால் நாம் ஆத்துமாக்களுக்குப் புரியக்கூடிய மொழியில் பேசுவோம். நம்மைப் பார்த்து நாமே இப்படிச் சொல்லிக்கொள்ளுவோம், ‘சபையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணால் புரிந்து கொள்ள முடியாத அந்தப் பெரிய வார்த்தையை நான் பயன்படுத்தக்கூடாது. அந்தப் பகுதியில் இருக்கும் கடினமான விஷயத்தை நான் விளக்க முயற்சிக்கக் கூடாது. என்னுடைய விளக்கம் கலங்கிப் போயிருக்கும் அந்த ஆத்துமாவைக் குழப்பத்துக்குள்ளாக்கி அமைதி ஏற்படுத்தாமல் போய்விடும்.’ . . . நீங்கள் ஆத்துமாக்களை நேசிக்கப் பழகுவீர்களானால் அதிகமான வசனங்களைப் பயன்படுத்து வதில் உங்களுக்கு ஆசை ஏற்படாது . . . நமக்கு அன்பு இருந்தால் சகலவிதமான ஜோடனைகளையும், வருணணைகளையும் நமது பேச்சில் இருந்து களைந்து, வேதத்தின் அர்த்¢தத்தை மட்டும் தெளிவாக விளக்கி, ஆத்துமாக்களுக்கு நமது பேச்சு ஆசீர்வாதமாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுவோம்.” ஸ்பர்ஜனின் இந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.
ஆத்துமாக்களுக்கு புரிகிறபடி, வெளிப்படையாக, ஜோடனைகளின்றி பிரசங்கம் செய்யவேண்டுமென்று வலியுறுத்துகிறபோது அதைத் தவறாக விளங்கிக் கொள்ளாமலிருப்பதும் அவசியம். இதுவரை நாம் விளக்கிய வற்றின் மூலம் நாம் எல்லா இடங்களிலும் ஒரே முறையில் பேச வேண்டும் என்று நான் கூறவரவில்லை. கிராமத்து மக்கள் முன்னிலையில் பேசுவதற்கும், படித்த கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. எல்லா இடங்களிலுமே அநாவசியமான ஜோடனைகள் தேவையில்லை; இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் பேசும்போது நமது பேச்சில் அவர்களுக்குத் தேவையான விஷய ஞானமிருப்பது அவசியம். புரிந்துகொள்ளும்படியாகப் பேச வேண்டும் என்று நான் தந்த ஆலோ சனையை நமது பேச்சு குழந்தைத்தனமானதாக, சாராம்சமற்றதாக, விஷய மற்ற, உப்புச்சப்பில்லாத பேச்சாக இருக்க வேண்டும் என்று தப்பாக விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்று பெரும்பாலான தமிழினத்து பிரசங்கிகளின் பிரசங்கங்கள் பொருளற்றதாகவும், கேட்பவர்களின் ஆத்மீக தாகத்தைத் தீர்த்துவைக்க முடியாததாகவும் இருக்கிறது என்று கூறுவது இருக்கின்ற நிலைமையை மிகைப்படுத்துவதாகாது.
நாம் எவ்வளவு படித்திருந்தாலும், எத்தனை மொழிவல்லமையுடையவர்களாக இருந்தாலும் நமது பிரசங்கத்தைத் கேட்கிறவர்கள் அதைப் புரிந்துகொள்ளும்படி பிரசங்கம் இருக்க வேண்டும். அதைச் செய்வதற்காக நாம் படிக்காத முட்டாளைப் போல பேச வேண்டியதில்லை; ரிக்ஷா இழுக்கிறவர்களைப் போலவும் பேசத்தேவையில்லை. தெருப் பாஷையில் பேசவேண்டிய அவசியமில்லாமலேயே நமது பேச்சுநடை எளிமையான தாக, கேட்பவர்கள் புரிந்துகொள்ளும்படியானதாக இருக்க வேண்டும்.
உச்சரிப்பு
பேச்சு நடையோடு நமது உச்சரிப்பும் தெளிவாக இருக்க வேண்டும். வார்த்தைகளை நாம் விழுங்கக் கூடாது. நாம் பேசுகின்ற வார்த்தைகளை ஆத்துமாக்கள் தெளிவாகக் கேட்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஸ்கொத்லாந்து நாட்டவர்களின் ஆங்கில உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கும். ஸ்கொத்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பிரசங்கி ஒருமுறை ஒரு சபையில் பிரசங்கித்தார். அந்த சபையில் ஆங்கிலம் தெரிந்த சீன இனத்தைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஸ்கொத்லாந்துப் பிரசங்கி சபையைக் குறித்துப் பயன் படுத்திய ஆங்கில வார்த்தையான Churchஐ அவர் ‘சுர்ச்’ என்று உச்சரித்த விதம் ஆங்கிலம் தெரிந்த சீனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. கூட்டம் முடிந்தபின் ஒரு சீனப் பெண் பிரசங்கியைப் பார்த்து அவர் உச்சரித்த அந்த வார்த்தை என்ன? என்று கேட்டாள். பிரசங்கம் முடியும்வரை அந்தப் பெண்ணின் மனம் அந்த வார்த்தை என்ன என்று ஆராய்வதிலேயே செலவழிந்து பிரசங்கத்தைக் கேட்காமல் செய்துவிட்டது. இந்த விஷயத்தை அந்தப் போதகரே ஒருமுறை என்னிடம் சொன்னார். அநேகர் பேசுகிற போது எல்லா ‘லகர’ங்களையும் ஒரேமாதிரியாக உச்சரிப்பார்கள். ‘ற’வையும், ‘ர’வையும்கூட ஒரே மாதிரியாக உச்சரிப்பார்கள். இதையெல்லாம் திருத்தி அமைத்துக் கொள்வது அவசியம்.
பிரசங்கிக்கிறபோது வார்த்தைகளையும் வசனங்களையும் உணர்ச்சியோடு பயன்படுத்த வேண்டும். வார்த்தைகள் வலிமைமிக்கது. அவற்றை அழுத்திப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் அழுத்திப் பயன்படுத்தி, நிறுத்திப் பேச வேண்டிய நேரத்தில் நிறுத்திப் பேசுவது அவசியம். தங்குதடையில்லாமல் குதிரை ரேஸில் வர்ணணை கொடுப்பவரைப் போல உணர்ச்சியில்லாமல் பேசக்கூடாது. சிலர் உணர்ச்சியே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அது பிரசங்கத்தைப் பாழடித்துவிடும். பிரசங்கம் கேட்பவர்களையும் தூங்க வைத்துவிடும். தேவைக்கு மேலாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதும் பிரசங்கத்தைப் பயனில்லாமல் செய்துவிடும். அரசியல் மேடைப்பேச்சு நடை பிரசங்கத்திற்கு உதவாது. கருணாநிதியும், ஸ்டாலினும் கட்டைக் குரலில் நிறுத்தி நிறுத்திப் பேசுவது போல் பேசக்கூடாது. அவர்களுடைய பேச்சில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிகவும் அதிகம். இது பிரசங்கத்திற்கு உதவாது.
பிரசங்கத் தொனி
பிரசங்கிகள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம் அவர்களுடைய குரல் வளம். பிரசங்கியின் நடத்தை, பக்திவிருத்தி ஆகியவற் றிற்கும், பிரசங்கத் தயாரிப்புக்கும் அடுத்தபடியான இடத்தையே பிரசங்கி யின் பிரசங்கத் தொனி வகிக்கிறது. குரல் வளம் மட்டுமிருந்து ஒருவர் சிறந்த பிரசங்கியாகிவிட முடியாது. அதேவேளை குரல்வளத்தின் அவசியத்தை அலட்சியப்படுத்திவிடவும் முடியாது. ஒரு மெய்ப்பிரசங்கியின் வேதபூர்வமாக தயாரிக்கப்பட்ட பிரசங்கம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் பிரசங்கி தன்னுடைய குரலைத் தகுந்த முறையில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
பிரசங்கிக்கு இருக்கும் முக்கியமான கருவி குரல். பிரசங்கி கர்த்தர் தந்திருக்கும் தன்னுடைய குரலோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் நல்லபடி பிரசங்கிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குரலில் இருக்க வேண்டிய உயர்வு தாழ்வுகள், வேறுபாடுகள், அழுத்தங்கள், வேகம், உணர்ச்சி அத்தனையையும் பிரசங்கப் பணி சிறப்பாக இருப்பதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.
பிரசங்கப் பணி சிறப்பாக அமையும் பொருட்டு பிரசங்கி தன்னுடைய குரல்வளத்தைப் பெருக்கிக் கொள்ள கீழ்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றலாம்:
1. தன்னுடைய குரலைப் பயன்படுத்தும் விதத்தில் இருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
மூக்கினால் பேசும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மூக்கு பேசுவதற்காக அல்ல, மூச்சுவிடுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூக்கால் பேசும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வயிற்றில் இருந்து குரலை எழுப்பப் பயிற்சி செய்வது நல்லது. சிலருக்கு குரல் பெண்களுடைய குரலைப் போன்றதாக இருக்கும். அது உதவாது. பிரசங்கிகளின் குரலில் அநாவசிமான ஜோடனை இருக்கக்கூடாது. சில பிரசங்கிகள் கேட்பவர்கள் இதயத்தைக் கசியச் செய்வதுபோல் இனிப்பான குரலில் பேசுவார்கள். அது செயற்கையானது. அழுகின்ற குரலில் பேசுவதும் தகாது. தவறான விதத்தில் பேசிப்பேசிப் பழகிப் போனவர்கள் அதைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.
2. பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் அனைவரும் அதைக் கேட்கும் அளவுக்கு குரலை கம்பீரமாக உயர்த்திப் பேசப் பழக வேண்டும்.
சிலருடைய குரல் வளமானதாக இருந்தாலும் அவர்களால் குரலை உயர்த்திப் பேச முடியாமல் இருக்கும். ஆத்துமாக்களுக்கு தங்களுடைய குரல் கேட்கிறது என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கலாம். அதைவிட தங்களுடைய குரல் ஆத்துமாக்களுக்குக் கேட்கிறதா என்பதை அவர்கள் அடிக்கடி விசாரித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. சபையில் பின்வரிசையில் இருப்பவர்களுக்கு முன்வரிசையில் இருப்பவர்களுக்குக் கேட்பதைப்போலவே பிரசங்கம் கேட்க வேண்டும். சிலர் நன்றாக குரலை உயர்த்தி பிரசங்கத்தை ஆரம்பித்துவிட்டு பிற்பாடு பாதியில் குரலை அடக்கிக் கொள்வார்கள். இத்தகைய குறை உள்ளவர்கள் தங்களுடைய குரல் சாதாரணமாக மற்றவர்களுக்கு கேட்பதில்லை என்பதை நினைவில் வைத்து எப்போதும் குரலை உயர்த்திப் பேசுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். வாய்க்குள்ளேயே வைத்து வார்த்தைகளை மென்றுவிடுகிறவர் கள் பிரசங்க ஊழியத்துக்கு வருவதால் எந்தப் பயனுமில்லை. ஆரம்பத் திலேயே இதை சரிப்படுத்திக்கொள்ளாவிட்டால் போகப் போக பிரசங்க ஊழியத்தில் அவர்களால் வளர முடியாது.
சங்கீதம் கற்றுக்கொள்ளுகிறவர்கள் தங்களுடைய சாரீரத்தை நல்ல முறையில் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பார்கள். ஆற்றிலோ, குளத்திலோ இருந்து பாடிப் பயிற்சி எடுப்பார்கள். அது அவர்கள் குரலை வளமாகப் பயன்படுத்துவதற்கு உதவுகிறது. அதுபோல பிரசங்கி தன்னுடைய குரலில் கவனத்தை செலுத்துவது அவசியம். குரலை உயர்த்தி எல்லோருக்கும் கேட்கும்படியாகப் பேசுவது அவசியமானாலும், அநாவசியமாக குரலை தேவைக்கு மேலாக உயர்த்தி கேட்பவர்கள் காதுகளைக் கிழித்துவிடக் கூடாது.
3. குரலில் தேவையான உயர்வு தாழ்வுகளும், வேறுபாடுகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிரசங்கத்தை ஆரம்பித்து முடிக்கும்வரை பிரசங்கியின் குரல் ஒரே அளவில் தொடர்ந்து இருக்குமானால் கேட்பவர்கள் சலிப்படைந்து போவார்கள். எந்த இடத்தில் குரலை உயர்த்த வேண்டும், தாழ்த்த வேண்டும், நிறுத்திப் பேச வேண்டும் என்பது பிரசங்கிக்கு தெரிந்திருக்க வேண்டும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உச்சரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரசங்கி அதிக கவனம் எடுக்க வேண்டும். தன்னுடைய நாவையும், பற்களையும், தொண்டையையும், வயிற்றையும் அக்கறையுடன் தன்னுடைய குரல் வளத்திற்கு பொருத்தமானவிதத்தில் பயிற்சிசெய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீமோத்தேயுவுக்கு வயிறு சரியில்லாமலிருந்தபோது அதைக் குணப்படுத்திக் கொள்வதற்கு திராட்சை இரசத்தை அருந்தும்படிப் பவுல் கூறியதற்கு பிரசங்கியான தீமோத்தேயுவின் வயிற்றுக்கும், குரலுக்கும், பிரசங்கம் செய்வதற்கும் இருந்த பெருந்தொடர்புகூடக் காரணமாக இருந்திருக்கலாம்.
மேடை பாவனை
இனி பிரசங்க மேடையில் பிரசங்கி நின்று பிரசங்கிக்க வேண்டிய விதத்தைப் பற்றியும் சில ஆலோசனைகளை சொல்ல விரும்புகிறேன். நாம் பிரசங்கிக்கும்போது ஆத்துமாக்களின் கண்கள் நம்மீது பதிந்திருக்கின்றன. நமது பிரசங்கத்தை ஆத்துமாக்கள் கேட்கிறபோது நமது பிரசங்க மேடை செயல்முறைகள் அவர்களுடைய கவனத்தை எந்தவிதத்திலும் பாதித்துவிடுவதாக அமையக்கூடாது. பிரசங்கத்தை ஆரம்பித்து அது முடிகிறவரை ஆவியானவரின் கிரியைக்குத் தடையாக எதுவும் இருப்பதற்கு இடந்தரலாகாது.
தமிழகத்து பிரசங்கிகளில் பலர் கண்களை மூடிக்கொண்டு பிரசங்கம் செய்யும் வழக்கத்தை நான் கவனித்திருக்கிறேன். இப்படி ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. அது பக்தியைக் குறிப்பதாக இருக்கிறது என்று நினைக்கிறார்களோ என்னவோ. கண்களை மூடிக் கொண்டு பேசுவது மிகவும் தவறான செயல். ஆத்துமாக்களின் கண்களைப் பார்த்து பிரசங்கிக்க முடியாதவர்கள் மெய்ப்பிரசங்கிகள் அல்ல. உத்தமமான இருதயத்தைக் கொண்டிராதவர்கள் மட்டுமே கண்களை மூடிக்கொண்டு பிரசங்கிப்பார்கள்; பேசுவார்கள். மெய்ப்பிரசங்கிகளுக்கு இது தகாது. ஜெபிக்கும்போது மட்டுமே கண்கள் மூடி இருக்க வேண்டும். பேசும்போது கண்கள் திறந்திருக்க வேண்டும்.
பிரசங்க மேடையில் நிற்கும்போது ஒரு காலில் நின்று பிரசங்கிக்கும் சிலரையும் பார்த்திருக்கிறேன். இரண்டு கால்களிலும் நின்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறவனாக பிரசங்கி இருக்க வேண்டும். ஒரு காலில் நின்றோ அல்லது பிரசங்க மேடையில் ஒரு பக்கம் சாய்ந்து நின்றோ அல்லது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டோ, கூரையைப் பார்த்துக் கொண்டோ பேசுவது மிகவும் தவறு. இதெல்லாம் பிரசங்கம் செய்வதற்கு உதவாத செயல்முறைகள்.
பிரசங்கம் செய்யும்போது ஒரே இடத்தில் நின்று அசையாமல் கூட்டத் தில் ஒருபகுதியினரை மட்டும் பார்த்து பிரசங்கிக்கக்கூடாது. கூட்டத்தின் சகல பக்கமும் நமது கண்கள் திரும்ப வேண்டும். அதற்கேற்ப உடலசைவும் இருக்க வேணடும். பிரசங்க மேடையில் உணர்ச்சியற்ற கட்டைபோல இயங்காமல், இயந்திரம் போல செயல்படாமல், உணர்ச்சியோடும், கம்பீரத் தோடும், வேத அதிகாரத்தோடும் பிரசங்கி இயங்க வேண்டும்.
- பாலா
https://www.google.co.in/amp/s/biblelamp.me/2012/03/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D/amp/?client=ms-android-motorola

[10/20, 12:14 PM] Tamilmani Brother: *நீளமான பதிவு ………… படியுங்கள் பிரசங்கியார்களே* 👆🏾👆🏾

[10/20, 12:18 PM] Tamilmani Brother: 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
_ஆவிக்குரியவனாய்,_
_சத்தியமறிந்தவனாய்,_ _தன்னலமற்றவனாய், வேதத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற, ஏற்கனவே பரிசோதித்தறியப்பட்ட நல்ல ஊழியர்கள்_ _உருவாக்கப்பட வேண்டும்._
*1 கொரிந்தியர் 12லும், ரோமர் 12லும், எபேசியர் 4லும் திருச்சபைக்கு வரங்களை அளிப்பதாக கிறிஸ்து விளக்குகிறார்.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

[10/20, 12:26 PM] Levi Bensam Pastor: நீதிமொழிகள் 26: 17
*வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.*
Proverbs 26: 17
*He that passeth by, and meddleth with strife belonging not to him, is like one that taketh a dog by the ears.*

[10/20, 12:29 PM] Levi Bensam Pastor: யாக்கோபு 3: 6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
James 3: 6
And the tongue is a fire, a world of iniquity: so is the tongue among our members, that it defileth the whole body, and setteth on fire the course of nature; and it is set on fire of hell.

[10/20, 12:32 PM] Levi Bensam Pastor: யாக்கோபு 1: 26
உங்களில் ஒருவன் தன் *நாவை அடக்காமல்*, தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய *தேவபக்தி வீணாயிருக்கும்.*
James 1: 26
If any man among you seem to be religious, *and bridleth not his tongue, but deceiveth his own heart, *this man's religion is vain.*
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐

[10/20, 12:34 PM] Levi Bensam Pastor: நீதிமொழிகள் 10: 19
*சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.*
Proverbs 10: 19
*In the multitude of words there wanteth not sin: but he that refraineth his lips is wise*

[10/20, 12:34 PM] Jeyanti Pastor: Yes.  மனதை அட௧்குபவன் உத்தமன்

[10/20, 12:36 PM] Levi Bensam Pastor: நீதிமொழிகள் 16: 32
*பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.*
Proverbs 16: 32
*He that is slow to anger is better than the mighty; and he that ruleth his spirit than he that taketh a city*
💪💪💪💪💪💪💪💪💪💪

[10/20, 1:32 PM] Tamilmani Brother: *கோட்டையை*
*பிடிக்கறவனை*
*காட்டிலும்*
*கோபத்தை*
*அடக்குகிறவன்*
*உத்தமன்.*

[10/20, 1:33 PM] Tamilmani Brother: _சொல்லுகிறவவார்களாய் இல்லாமல் செய்கிறவர்களாய் இருக்கனும்._

[10/20, 1:49 PM] Tamilmani Brother: _ஒரு பாஸ்டரை விசுவாசி ஒருத்தர் தன் மகனை காண்பித்து இவனுக்கு ஜெபிக்கச்சொன்னாராம். எதுக்காக ஜெபிக்கனும்னு கேட்டிருக்கார். பையன் நிறைய சர்க்கரை (ஸ்வீட்) சாப்பிடுகிறான்.  சாப்பிடக்கூடாதுன்னு ஜெபிங்க பாஸ்டர். அப்படியான்னு பாஸ்டர் கேட்டுட்டு மூணு நாள் கழிச்சு வாங்கன்னு சொன்னார். திரும்ப மூணு நாள் கழிச்சு வந்தப்ப இரண்டு நாள் கழிச்சு வாங்கன்னு சொல்லிட்டார். விசுவாசியும் புரியாம போய்ட்டார்.  இரண்டு நாள் கழிச்சு வந்தப்ப பையனுக்காக ஜெபித்தார். போகும்போது விசுவாசி கேட்டாராம்  அய்யா முதல் நாள் வந்தப்பவே ஜெபித்திருக்கலாமேன்னு கேட்கிறப்ப பாஸ்டர் சொன்னார், எனக்கும் ஸ்வீட் சாப்பிடற பழக்கம் இருக்கு. நானே அதை நிறுத்தினால்தானே மற்றவர்களுக்கும் ஜெபிக்க முடியும்?  நா ஸ்வீட்டை நிறுத்தறக்குத்தான் இவ்வளவு நாளாயிருச்சுன்னார்!!_

[10/20, 2:33 PM] Tamilmani Brother: ஆமாம். வேத வசனப்படி இருப்பதால் பிரசங்கியார் சொல்லுகிறார்கள்.
_அவர் பெரிய ஆத்மா மட்டுமே, நாம இயேசுவாக மாற வேண்டிய ஆத்மா!!_

[10/20, 4:05 PM] Darvin-ebin Whatsapp: ரொம்பரொம்ப சரி ஆனால் இவைகளெல்லாம் இயற்கையாகவே பிரசிங்கிக்கிறவர்களுக்குள் காணப்படவேண்டும்

[10/20, 4:25 PM] Kumar Whatsapp: அழகானவர் அருமையானவர் இனிமையானவர் மகிமையானவர் மீட்பரானவர்
அழகானவர் அருமையானவர் இனிமையானவர் மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு ( 2 )
1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் ( 2 ) என்னுடையவர் என் ஆத்தும நேசரே
2. கன்மலையும் கோட்டையும் துணையுமானார் ஆற்றித் தேற்றி காத்திடும் தாயுமானவர் என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா ( 2 ) என்னுடையவர் என் ஆத்தும நேசரே
3. கல்வாரி மேட்டிலே கொல்கொதாவிலே நேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் பாசத்தின் எல்லை தான் இயேச ராஜா ( 2 ) என்னுடையவர் என் அன்பு இரட்சகர்.

[10/20, 4:32 PM] Kumar Whatsapp: ஜெபம் செய்யும் போதும் மாண்புமிகு தந்தை இயேசு ஐயா என்றுதானே பன்னவேண்டும் அதைமட்டும் ஏன் அப்பா என்று (லோக்கல்) கூறுகிறோம்...

[10/20, 4:34 PM] Kumar Whatsapp: நல்ல வார்த்தைகள் பேசினால் ஆத்துமாக்களை சேர்க்க  முடியாது நல்ல வசனங்களை தரவேண்டும்.... நல்ல ஊழியம் செய்ய வேண்டும்....

[10/20, 4:59 PM] Isaac Samuel Pastor: 21 நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர். பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமல் இருப்பீர். யோபு 5 :21

[10/20, 5:05 PM] Tamilmani Brother: அப்பா என்று கூப்பிடுவது மிக நெருக்கமான உறவை காட்டுகிறது. மடியில் அமர்ந்து கேட்கும் குழந்தை போல். அப்பா மிக அழகான தமிழ் சொல்.

[10/20, 5:06 PM] Kumar Whatsapp: அப்படி தான் ஐயா நடைமுறை பேச்சும்கூட🙏🙏🙏

[10/20, 5:08 PM] YB Johnpeter Pastor: லூக்கா 4: 22
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, 👉அவருடைய 👉வாயிலிருந்து 👉புறப்பட்ட 👉கிருபையுள்ள 👉வார்த்தைகளைக் குறித்து 👉ஆச்சரியப்பட்டு✝❤🙏👍 : இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
Luke 4: 22
And all bare him witness, and wondered at the gracious words which proceeded out of his mouth. And they said, Is not this Joseph's son?

[10/20, 5:09 PM] YB Johnpeter Pastor: மத்தேயு 4: 4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய 👉வாயிலிருந்து 👉புறப்படுகிற ஒவ்வொரு 👉👉வார்த்தையினாலும் 👉பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Matthew 4: 4
But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God.

[10/20, 5:10 PM] YB Johnpeter Pastor: யோபு 4: 4
👉விழுகிறவனை உம்முடைய 👉வார்த்தைகளால் 👉நிற்கப்பண்ணி, 👉தள்ளாடுகிற 👉முழங்கால்களைப் 👉பலப்படுத்தினீர்.  🙏🙏🙏🙏👍👍👍✝❤
Job 4: 4
Thy words have upholden him that was falling, and thou hast strengthened the feeble knees.

[10/20, 5:10 PM] Tamilmani Brother: இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.
(சங்கீதம் 12:3)

[10/20, 5:11 PM] Tamilmani Brother: தன் வாயையும் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
(நீதிமொழிகள் 21: 23)
Shared from Tamil Bible

[10/20, 5:12 PM] Tamilmani Brother: இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார், காலைதோறும் என்ன0) எழுப்புகிறார்,
கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என்செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
(ஏசாயா 50:4)

[10/20, 5:12 PM] YB Johnpeter Pastor: யோவான் 8: 16
👉நான் 👉நியாயந்தீர்த்தால், 👉என் தீர்ப்பு 👉சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
John 8: 16
And yet if I judge, my judgment is true: for I am not alone, but I and the Father that sent me.

[10/20, 5:14 PM] YB Johnpeter Pastor: ரோமர் 6: 14
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் 👉கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், 👉பாவம் உங்களை 👉மேற்கொள்ளமாட்டாது.
Romans 6: 14
For sin shall not have dominion over you: for ye are not under the law, but under grace.

[10/20, 5:15 PM] Darvin-ebin Whatsapp: ஆமேன் பெருமைபேசுகிரநாவு பிசாசுடையது
[10/20, 5:18 PM] Tamilmani Brother: *நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.*
(யாக்கோபு 3:8)

[10/20, 5:20 PM] Tamilmani Brother: _உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்._
(யாக்கோபு 1:26)

[10/20, 5:22 PM] Tamilmani Brother: *உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.*
_(யாக்கோபு 1: 26)_

[10/20, 5:25 PM] Darvin-ebin Whatsapp: ஆமேன் கர்தரிடத்தில் காத்திருந்து பெற்றுக்கொண்டு சமயத்தில் சொல்லுகிற வார்த்தை இளைத்தவனை பெலனடைய செய்யும்

[10/20, 5:25 PM] Tamilmani Brother: *நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.*
_(சங்கீதம் 37:30)_

[10/20, 5:29 PM] Tamilmani Brother: *ஆரோக்கியமுள்ள நாவு*_ஜீவவிருட்சம்: நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்._
(நீதிமொழிகள் 15:4)

[10/20, 5:29 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 19: 14
என் கன்மலையும் என் மீட்பருமாகிய 👉கர்த்தாவே, 👉என் வாயின் 👉வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் 👉பிரியமாய் 👉இருப்பதாக.
Psalm 19: 14
Let the words of my mouth, and the meditation of my heart, be acceptable in thy sight, O LORD, my strength, and my redeemer.

[10/20, 5:31 PM] Tamilmani Brother: *வேண்டாமே பொய் நாவு....*
_சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்._
 (நீதிமொழிகள் 12:19)
.
[10/20, 5:32 PM] Tamilmani Brother: கர்த்தருக்கு அருவருப்பான ஆறு காரியங்களில் பொய் நாவும் ஒன்று வேதம் கூறுகிறது.

[10/20, 5:33 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 45: 1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; 👉👉என் நாவு 👉விரைவாய் 👉எழுதுகிறவனுடைய 👉எழுத்தாணி.
Psalm 45: 1
My heart is inditing a good matter: I speak of the things which I have made touching the king: my tongue is the pen of  ready writer.

[10/20, 5:35 PM] Isaac Samuel Pastor: நாவுக்கு தேவன் கொடுத்த மகத்துவம்
[10/20, 5:35 PM] Tamilmani Brother: *'பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்'*
(வெளி. விசேஷம்  21:8).
_இயேசுகிறிஸ்து யார் யார் பரலோகத்தில் வரமாட்டார்கள் என்றும், யார் யார் நரகத்தில் பங்கடைவார்கள் என்றும் குறிப்பிடும்போது, பொய்யர்களும் அதில் பங்கடைவார்கள் என்று சொல்வதைப் பார்க்கும்போது, நாம் பொய் பேசாதபடி எத்தனை கவனமாய் இருக்க வேண்டும்?  நாம் மற்றவர்களிடம் பேசும்போது எப்போதும் உண்மையையே பேசுவோம். கர்த்தர் அருவருக்கிற பொய்யை பேசாதபடி நம்மைக் கர்த்தருக்குள் காத்துக் கொள்வோம். உண்மையுள்ள மனுஷனே கர்த்தருடைய பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான். ஆமென் அல்லேலூயா!_

[10/20, 5:36 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 141: 3
👉கர்த்தாவே, 👉என் வாய்க்குக் 👉காவல்வையும்; 👉என் 👉உதடுகளின் 👉வாசலைக் 👉காத்துக்கொள்ளும்.
Psalm 141: 3
Set a watch, O LORD, before my mouth; keep the door of my lips.

[10/20, 5:50 PM] Elango: அருமையான விளக்கம் ஆவி, ஆத்துமா, சரீரம், நாவு, பெந்தேகோஸ்தே நாள்👍👍✍✍

[10/20, 6:22 PM] Isaac Samuel Pastor: இருதயத்தை காண உதவும் கண்ணாடி

[10/20, 6:30 PM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 26
அதினாலே 👉என் இருதயம் 👉மகிழ்ந்தது, 👉என் நாவு 👉களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
Acts 2: 26
Therefore did my heart rejoice, and my tongue was glad; moreover also my flesh shall rest in hope:

[10/20, 6:33 PM] YB Johnpeter Pastor: பிலிப்பியர் 2: 11
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக 👉இயேசுகிறிஸ்து 👉கர்த்தரென்று 👉நாவுகள் யாவும் 👉அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
Philippians 2: 11
And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.

[10/20, 6:34 PM] YB Johnpeter Pastor: ரோமர் 14: 11
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், 👉நாவு யாவும் 👉தேவனை 👉அறிக்கைபண்ணும் என்று 👉என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் 👉கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
Romans 14: 11
For it is written, As I live, saith the Lord, every knee shall bow to me, and every tongue shall confess to God.

[10/20, 6:47 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 126: 2
அப்பொழுது 👉நம்முடைய 👉வாய் 👉நகைப்பினாலும், 👉நம்முடைய 👉நாவு 👉ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: 👉கர்த்தர் இவர்களுக்குப் 👉பெரிய காரியங்களைச் செய்தார் என்று 👉புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Psalm 126: 2
Then was our mouth filled with laughter, and our tongue with singing: then said they among the heathen, The LORD hath done great things for them.

[10/20, 6:48 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 37: 30
👉நீதிமானுடைய 👉வாய் 👉ஞானத்தை உரைத்து, 👉அவனுடைய நாவு 👉நியாயத்தைப் பேசும்.
Psalm 37: 30
The mouth of the righteous speaketh wisdom, and his tongue talketh of judgment.

[10/20, 7:09 PM] YB Johnpeter Pastor: ஏசாயா 6: 7
அதினால் 👉என் வாயைத் 👉தொட்டு: இதோ, இது 👉உன் உதடுகளைத் 👉தொட்டதினால் 👉உன் அக்கிரமம் நீங்கி, 👉உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.  😎😀😀😀😎❤✝🙏👑
Isaiah 6: 7
And he laid it upon my mouth, and said, Lo, this hath touched thy lips; and thine iniquity is taken away, and thy sin purged.

[10/20, 7:18 PM] YB Johnpeter Pastor: எரேமியா 15: 16
👉உம்முடைய 👉வார்த்தைகள் 👉கிடைத்தவுடனே அவைகளை 👉உட்கொண்டேன்; 👉உம்முடைய 👉வார்த்தைகள் 👉எனக்குச் 👉சந்தோஷமும், என் 👉இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
Jeremiah 15: 16
Thy words were found, and I did eat them; and thy word was unto me the joy and rejoicing of mine heart: for I am called by thy name, O LORD God of hosts.

[10/20, 7:21 PM] YB Johnpeter Pastor: ஆதியாகமம் 3: 6
அப்பொழுது 👉ஸ்திரீயானவள், 👉அந்த விருட்சம் 👉புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் 👉கனியைப் பறித்து, 👉புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; 👉அவனும் புசித்தான்.👈 🍎🍐🍋🍉🍅🍈🍑🍏🍓
Genesis 3: 6
And when the woman saw that the tree was good for food, and that it was pleasant to the eyes, and a tree to be desired to make one wise, she took of the fruit thereof, and did eat, and gave also unto her husband with her; and he did eat.

[10/20, 7:24 PM] YB Johnpeter Pastor: மத்தேயு 12: 34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, 👉நலமானவைகளை 👉எப்படிப் 🗣பேசுவீர்கள்?👈 👉இருதயத்தின் 👉நிறைவினால் 👉வாய் பேசும்.👈
Matthew 12: 34
O generation of vipers, how can ye, being evil, speak good things? for out of the abundance of the heart the mouth speaketh.

[10/20, 7:29 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 2: 7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு 👉தேவனுடைய 👉பரதீசின் 👉மத்தியிலிருக்கிற 👉ஜீவவிருட்சத்தின் 👉கனியைப் 👉புசிக்கக்கொடுப்பேன்👈  என்றெழுது. 🍓🍏🍑🍈🍎🍐🍋🍉🍅👉🍇
Revelation 2: 7
He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; To him that overcometh will I give to eat of the tree of life, which is in the midst of the paradise of God.

[10/20, 7:35 PM] YB Johnpeter Pastor: நீதிமொழிகள் 18: 21
👉மரணமும்☠ 👉ஜீவனும்🍇 👉நாவின் 👉அதிகாரத்திலிருக்கும்; 👉அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் 👉கனியைப் புசிப்பார்கள்.👈 🍋🍉🍅🍏🍑🍓🍈🍎🍐      ✝❤🍇👑😎😀🐐
Proverbs 18: 21
Death and life are in the power of the tongue: and they that love it shall eat the fruit thereof.

[10/20, 7:50 PM] Thomas Brother: வாயினால் பாவம் செய்யாமல் இருக்க →
1) வாய் மீறாதபடி தீர்மானம் பண்ண வேண்டும் - சங் 17-3
2) கடிவாளத்தால் வாயை அடக்கி வைக்க வேண்டும் - சங் 39-1
3) வாய்க்கு காவல் வைக்க வேண்டும் - சங் 141-3
4) உதடுகளின் வாசலை காத்து கொள்ள வேண்டும் - சங் 141-3
5) ஜெயிக்க வேண்டும் (எனது வாயின் வார்த்தைகள் உமக்கு பிரியமாக இருக்க வேண்டும்) - சங் 19-14
6) பேசும் போது தேவபயத்தோடு பேச வேண்டும் - மல்கி 3-16
7) நமது பேச்சை கர்த்தர் கவனித்து கேட்கிறார் என்ற உணர்வு வேண்டும் - மல்கி 3-16

[10/20, 8:34 PM] YB Johnpeter Pastor: யோவான் 6: 49
உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.
John 6: 49
Your fathers did eat manna in the wilderness, and are dead.

[10/20, 8:42 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 2: 17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் 👉மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, 👈 அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
Revelation 2: 17
He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; To him that overcometh will I give to eat of the hidden manna, and will give him a white stone, and in the stone a new name written, which no man knoweth saving he that receiveth it.

[10/20, 9:41 PM] Manimozhi New Whatsapp: நாக்கு = நெருப்பு = சுடும்

[10/20, 10:03 PM] YB Johnpeter Pastor: எபேசியர் 4: 29
👉கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் 👉வாயிலிருந்து புறப்படவேண்டாம்; 👉பக்திவிருத்திக்கு ஏதுவான 👉நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் 👉பிரயோஜனமுண்டாகும்படி 🗣👉பேசுங்கள்.👈😊😊😊😀😀😎👍
Ephesians 4: 29
Let no corrupt communication proceed out of your mouth, but that which is good to the use of edifying, that it may minister grace unto the hearers.

[10/20, 10:05 PM] Kumar Whatsapp: 12  இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
ஆதியாகமம் 45
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/20, 10:12 PM] Kumar Whatsapp: 18 ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
1 இராஜாக்கள் 19
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/20, 10:17 PM] Kumar Whatsapp: 20 அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர். அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
நெகேமியா 9 :20

Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/20, 10:21 PM] Kumar Whatsapp: லூக்கா 6: 45
நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
Luke 6: 45
A good man out of the good treasure of his heart bringeth forth that which is good; and an evil man out of the evil treasure of his heart bringeth forth that which is evil: for of the abundance of the heart his mouth speaketh.

[10/20, 10:22 PM] Kumar Whatsapp: சங்கீதம் 37: 30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
Psalm 37: 30
The mouth of the righteous speaketh wisdom, and his tongue talketh of judgment.
[10/20, 10:24 PM] Kumar Whatsapp: சங்கீதம் 49: 3
என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
Psalm 49: 3
My mouth shall speak of wisdom; and the meditation of my heart shall be of understanding.

[10/20, 10:25 PM] Kumar Whatsapp: சங்கீதம் 71: 8
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
Psalm 71: 8
Let my mouth be filled with thy praise and with thy honour all the day.

[10/20, 10:26 PM] Kumar Whatsapp: சங்கீதம் 71: 15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
Psalm 71: 15
My mouth shall shew forth thy righteousness and thy salvation all the day; for I know not the numbers thereof.

[10/20, 10:27 PM] Kumar Whatsapp: சங்கீதம் 126: 2
அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Psalm 126: 2
Then was our mouth filled with laughter, and our tongue with singing: then said they among the heathen, The LORD hath done great things for them.

[10/20, 10:28 PM] Kumar Whatsapp: சங்கீதம் 145: 21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
Psalm 145: 21
My mouth shall speak the praise of the LORD: and let all flesh bless his holy name for ever and ever.

[10/20, 10:29 PM] Kumar Whatsapp: உன்னதப்பாட்டு 5: 16
அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்.
Song of Solomon 5: 16
His mouth is most sweet: yea, he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem.

[10/20, 10:30 PM] JacobSatish Whatsapp: 14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள், மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
நீதிமொழிகள் 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/20, 10:31 PM] Kumar Whatsapp: எரேமியா 36: 6
நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமின்றி, தங்கள் பட்டணங்களிலிருந்துவருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
Jeremiah 36: 6
Therefore go thou, and read in the roll, which thou hast written from my mouth, the words of the LORD in the ears of the people in the LORD'S house upon the fasting day: and also thou shalt read them in the ears of all Judah that come out of their cities.

[10/20, 10:33 PM] Kumar Whatsapp: யூதா 1: 16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
Jude 1: 16
These are murmurers, complainers, walking after their own lusts; and their mouth speaketh great swelling words, having men's persons in admiration because of advantage.

[10/20, 10:34 PM] JacobSatish Whatsapp: 4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேசவிரும்புகிறார்கள், தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.)
சங்கீதம் 62
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/20, 10:36 PM] Kumar Whatsapp: வேதத்தில் வாய் என்ற வார்த்தை 65 இடங்களில் காணப்படுகிறது... 🙏

[10/20, 10:37 PM] JacobSatish Whatsapp: கண்டிப்பாகவா 65 தடவைதானா